Wednesday 8th of May 2024 02:26:01 PM GMT

LANGUAGE - TAMIL
-
மன்னார் மாவட்டத்தில் 95 பேருக்கு கொரோனாத் தொற்றுறுதி!

மன்னார் மாவட்டத்தில் 95 பேருக்கு கொரோனாத் தொற்றுறுதி!


மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (11) மேலும் புதிதாக 95 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 11 நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 276 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விடுத்துள்ள கொரோனா தொற்று நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (11) மேலும் புதிதாக 95 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 84 கொரோனா தொற்றாளர்கள் மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 11 நாட்களில் 276 கொரோனா தொற்றாளர்கள் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ் வருடம் மன்னார் மாவட்டத்தில் 1943 தொற்றாளர்களும், தற்போது வரை மாவட்டத்தில் மொத்தமாக 1960 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 22 கொரோனா தொற்று மரணம் நிகழ்ந்துள்ளது.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE